search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோதனை ஓட்டம் நிறைவு"

    • மதுரையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் வரையில் எலெக்ட்ரிக் ரெயிலாக இயக்கப்படுகிறது.
    • வணிகர் சங்கங்கத்தினர் பழனி வந்த ரெயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பழனி:

    மதுரையில் இருந்து கோவை வரை இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் வரையில் எலெக்ட்ரிக் ரெயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் பழனி வரை ஒரு எண்ணிலும், பழனியிலிருந்து கோவை வரை வேறொரு எண்ணிலும் இயக்கப்பட்டு வருகிறது.

    பழனியில் இருந்து கோவை வரை எலெக்ட்ரிக் வழித்தடத்தில் இயக்குவதற்கான பணிகள் கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்த நிலையில் அவை தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை பழனியில் இருந்து கோவை வரை எலெக்ட்ரிக் வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

    முன்னதாக ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயிலை வணிகர் சங்கங்களின் நிர்வாகி சரவணன் தலைமையில் வணிகர்கள் வரவேற்றனர். எஞ்சின் ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு சங்க நிர்வாகிகளான பச்சமுத்து, சீனிவாசன், ஈஸ்வரன், நாகராஜ், பாலு, நாகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த வழித்தடத்தில் திண்டுக்கல் முதல் பழனி வரை மட்டுமே எலெக்ட்ரிக் பணிகள் நிலுவையில் உள்ளது. இந்த பணியும் விரைவில் நிறைவு பெற்று மதுரையில் இருந்து கோவை வரை எலெக்ட்ரிக் ரெயிலாகவே இது இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விரைவாக தங்கள் பயணத்தை எட்ட முடியும் என்று பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×